அலைகடலெனத் திரண்ட மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி!! (படங்கள் இணைப்பு)

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யாழ் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சற்று முன்னர் யாழ் நகருக்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பெரும் திரளான மக்கள் இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ஜனாதிபதி மைத்திரி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.