இலங்கையில் மகளின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தாது சுய தனிமையில் இருக்கும் தந்தை!

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளை சந்தித்தவர்கள் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என அரசாங்கம் கோரி வருகின்றது.

எனினும், அதனை பலரும் பொருட்படுத்தாத நிலையில், அதனை சரியாக செய்த தந்தை ஒருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவிசாவளை – எஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த நிரோஷ் மஞ்சுள, சுற்றுலா பேருந்து ஒன்றின் சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய கடந்த 24ம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றார்.

நிரோஷ் மஞ்சுள தனக்கு சொந்தமான மற்றுமொரு வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில், தனது மூத்த மகள் சுகயீனமுற்றிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் மகளின் பூதவுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதிலும், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை கூட நிரோஷ் மஞ்சுள இழந்துள்ளார்.

தனது மகளின் பூதவுடலை எதிர் வீட்டிலிருந்து பார்த்த வண்ணம், தனது மகளின் பூதவுடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் தனது சமூகத்தின் நன்மைக்காக தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் தனது மகளின் வாழ்க்கையின் கடைசி தருணத்தை கூட அவர் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.