மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவர்கள் குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்டு 8 மாத கர்ப்பணியான சிறுமியை மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி கடந்த 8 மாதத்திற்கு முன்னர் கொழும்பில் இருக்கும் சிறிய தந்தையின் வீட்டிற்கு தாயாருடன் சென்ற நிலையில் அங்கு அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக கர்ப்பிணியான நிலையில் வீட்டில் சிறுமியை ஒழித்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கொழும்பில் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.






