சற்று முன்னர் வெளியான அறிக்கை! ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். அதேபோன்ற தற்போதுவரை கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வெளியிடும் தகவல்களை கேட்டு பொது மக்கள் விழிப்பாக இருக்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.