வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெறலாம் – புதிய வழிமுறையை அறிமுகம் செய்த அரசாங்கம்…!

வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நோயாளர்களும் வைத்தியர்களும் கையடக்க தொலைபேசி மூலம் உரையாடுவதன் மூலம் சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.

இந்த நவீன சிகிச்சை முறையானது எதிர்காலத்தில் ஏனைய விசேட வைத்தியசாலைகளிலும் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கான இந்த சேவையினை பெற்றுக்கொள்வதற்காக 077 077 33 33 என்ற தொலைபேசி இலக்கத்தின் வாயிலாகவும், oDoc app வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.