வெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி!

பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார்.

தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம் என்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. லொஸ்லியா ஆபாச காட்சியில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டும், பல மீம்ஸ்களையும் வெளியிட்டு வந்தனர்.

இதனை அவதானித்த லொஸ்லியா ஆர்மியினர் கடும் கோபத்தில் ஆழ்ந்த நிலையில், குறித்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த வதந்திக்கு லொஸ்லியா பதிலளிக்கையில், பொய்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்று ஒரு சில விடயங்கள் இருக்கின்றது. ஆனால், ஒரு கட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரு உன்னதமான ஆத்மாதான் இறுதிவரை கூட இருக்கும் என்பதை புரிந்து கொள்வோம். இந்த உலகம் முழுக்க பயமும் எதிர்மறையான கருத்துக்களும் மற்றவர்களை மதிப்பிடுவதில் தான் அதிகமாக இருக்கின்றது. இதுபோன்ற மக்கள் அனைவரும் சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

லொஸ்லியாவின் பதிவைக் கண்ட ரசிகர்கள் கவலைப்படாதீர்கள் என்றும் அது பொய் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்… நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியும்… எங்களது அன்பு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கின்றது என்று லொஸ்லியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் பிரபலங்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இவ்வாறு பெயரை டேமேஜ் நிகழ்வுகள் அதிகமாகவே நிகழ்கின்றது. அதுவும் கஷ்டத்தின் மத்தியில் வளர்ந்து வரும் பிரபலங்களையே குறிவைத்து தர்மசங்கடத்திற்கு கொண்டு போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.