பாட்டி வைத்தியத்தில் கோரோன மாத்திரை? காட்டுத்தீயாய் பரவிய புகைப்படத்தின் பின்னணி தகவல்

கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 1914-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பாட்டி வைத்தியம் எனும் புத்தகத்தில் ” கோரோன மாத்திரை ” எனும் மருந்து இருப்பதாகவும், அதனை உடனே சாப்பிடுமாறு அப்புத்தகத்தின் பக்கம் பரிந்துரை செய்யப்பட்டு பகிரப்பட்டு வந்தது.

ஆனால் இது “கோரோசனம் மாத்திரையே” என்றும், மூச்சுத்திணறல் கோளாறுகளுக்காக மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனா வைரசிற்கானது எனப் பரவும் தகவல் தவறானது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.