கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாவது நபர் மொஹமட் ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்த மொஹமட் ஜனூஸின் சடலமே சற்றுமுன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது.

நேற்று இரவு முதல் ஜனாஸாவை பெற்று அடக்கம் செய்ய குடும்பத்தார் தீவிர முயற்சிகளை எடுத்தபோதும் மருத்துவ காரணங்களை காட்டி அதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்படவில்லை.