இலங்கையில் கோரோனாவால் நான்காவது நபர் உயிரிழப்பு

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரே இவ்வாறு உயிரிழந்தார்.