யாழ் நகர் பகுதியில் ஊரடங்கை மீறியவர்கள் மீது இராணுவத்தினரின் சிறப்பான கவனிப்பு

யாழ்.நெல்லியடி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதகளில் தேவையில்லாமல் அலைந்து திரி ந்தவர்கள் இராணுவத்தினால் சிறப்பாக கவனிக்கப்பட்டிருப்பதுடன், வீதியில் முழங்காலில் இருத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் வீதிகளில் தேவையற்று அலை பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், வடமராட்சியில் இன்று காலை பொலிஸார் தடியடி நடாத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேபோல் நெல்லியடி நகரில் தேவையில்லாமல் வீதிகளில் நடமாடியவர்கள் இராணுவத்தினரா ல் வீதியில் முழங்காலிட்டு இருத்தப்பட்டதுடன், கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.