34 ஆண்டுகளின் பின் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட முருகன் ஆலயம்!!

திருகோணமலை, சாம்பல் தீவு ஆத்திமோட்டைப் பகுதியில் உள்ள மண் கிண்டி மலை முருகன் ஆலயம் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.34 ஆண்டுகளாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆலயத்தை புதிதாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.