வேகமாக பரவும் கொரோனா வைரஸ்! அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் வீரியம் கூடியுள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் 1480 பேர் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நேற்று ஒரே நாளில் மாத்திரம் அமெரிக்காவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 8200 பேர் வரையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணமே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்கில் மாத்திரம் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன