29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!! அபிக்யா ஆனந்த்

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதிக நாட்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே அது தொடர்பாக ஆர்வமாக படித்ததுடன் வேதங்களையும் கற்று உணர்ந்தார்.

இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.இவருக்கு 2015ஆம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016ஆம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தன. இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து கான்சைன்ஸ் (Conscience) எனப்படும் யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.

இந்த யூ-டியூப் சேனலில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அபிக்யா குறிப்பிட்டுவருகிறார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.

கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே சரியாக கணித்துக் கூறிய இவர், குறித்த வைரஸ் தொற்று எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.

இவருடைய கணிப்புக்கள் தற்போது உலகளவில் பிரபலமடைந்திருப்பதுடன் இவருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.