யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல்வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு

யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம், மற்றும் கண்டி மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் தொடந்து நீடிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குறித்த ஆறு மாவட்டங்களைத் தவிர 19 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு மாலை 2 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை அரச மற்றும் தனியார் வீடகளில் இருந்து வேலை செய்யும் காலம் நாளை ஆறாம் திகதியிலிருந்து ஏப்ரல் 10 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.