உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட பெண் கைது..!

கொவிட் 19 வைரஸ் தொடர்பில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 44 வயதுடைய வாத்துவ பகுதியைச் சேரந்தவர் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.