கனடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ். தமிழர்

கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.

இந்தச் சம்பவத்தில் பலியானவர் இலங்கையின் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கமலக்கண்ணன் என நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.