கொரோனா தொடர்பில் யாழ்ப்பாண இளைஞர்களின் முன்மாதிரி!

உலகை அச்சுறுத்தும் கொரோனா இலங்கையிலும் பரவியுள்ள நிலையில் அதன் பரவுதலை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிராமத்தின் எல்லையில் இளைஞர்கள் வீதி மறியலிட்டு, கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனர்.

கிராமத்தை விட்டு வெளியே அத்தியாவசியத் தேவைக்காக செல்பவர்கள், மீண்டும் திரும்பி வரும்போது, கைகளை கழுவி சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கிறார்கள். வெளியாட்கள் உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் உள்ள கிராம ஒன்றும் இதேபோன்று தமது கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனர்.