கொரோனா வைரஸ்! பிரான்ஸ் மருத்துவமனையில் ஆய்வுகூடத்தில் பணியாற்றும் யாழ். பெண் கூறுவது என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், இதனால் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளர். ஆரம்பத்தில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது.

பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மன் என பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் மருத்துவமனையில் ஆய்வுகூடத்தில் பணியாற்றுபவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

செபஸ்தினி ஜெயராஜ் என்ற பெண்ணே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.