சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் மரணம்

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.

நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வயோதிபப் பெண்ணின் 2 மகன்மாரில் ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் தொழில்புரிந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு சுகயீனத்துடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரி கண்டி வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை வைத்தியசாலை டாக்டர் பிரதீப் திசாநாயக்க தெரிவித்தார்.