யாழ் மாதகல் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்

யாழ் மாதகல் பகுதியைச்சேர்ந்த உதயராஜா டிலக்சி என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டவராவார்
கணவர் மற்றும் ஏனைய குடும்பத்தினர் நேற்றையதினம் கோவில் சென்றிருந்த நிலையில் குறித்த பெண் மாத்திரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
வெளியே சென்றிருந்தவர்கள் மீண்டும் வந்து பார்த்தவேளை டிலக்சி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்
வீட்டிலிருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டடிருந்த நிலையில் கொள்ளைக்காக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
யாழ் மாதகல் பொலிசார் இச்சம்பவம் தொடர்;பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்