யாழ் இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்!! இந்திய நடிகையுடன் திருமணம்!!!

இலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துரடி தொடர்பில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பிரபல தனியார் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தில் நடிப்பவரே சரண்யா.
சென்னையை சேர்ந்த இவர் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் MA Broadcasting Communication படித்து, ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர், பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் தெலுங்கு மற்றும் 2 தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் இலங்கைத் தமிழரை காதலித்து மணமுடித்த நிலையில் இவர்களின் காதல் கதை தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் மயிலாப்பூர் – கபாலீஸ்வரர் கோவிலுக்கு அமுதனின் குடும்பத்தினர் வந்தபோது அமுதனை சரண்யா சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி கல்யாணம் வரை சென்றுள்ளது.
லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்து ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார் என சரண்யா தெரிவித்திருக்கின்றார்.
மேலும், என்னுடைய கணவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர். யோகா மற்றும் தியானக் கலையிலும் அவர் நிபுணர் எனவும் தனது காதல் கணவரைப்பற்றி கூறியுள்ளார்.
திருமணத்திற்குப் பின் இந்தியாவில் இருந்து செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தங்கி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.