யாழிலிருந்து வெளியேறும் மக்கள்? ஏ9 வீதியில் பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு

ஏ9 வீதியில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து காடுகள் ஊடாகவும் கடற்கரையோரமாகவும் மக்கள் வெளியேறிச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்தே படையினர் தமது பாதுகாப்பை மேலும் இறுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்றையதினம் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் மக்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் தமக்கு உண்ண உணவு இல்லாத நிலையிலேயே தாம் வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.