19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படும். ஊரடங்கு உத்தரவு தொடர்பி்ல் வெளியான தகவல்

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும்.

இதனையடுத்து குறித்த மாவட்டங்களுக்கு நாளை பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.