வீடு உடைத்து உள்நுழைந்து திருடப்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் மீட்கப்பட்டன. அவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கோப்பாய் கோண்டாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் முற்பகல் இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டு உரிமையாளா்கள் யாழ்பாணம் சென்றிருந்தபோது திருட்டு இடம்பெற்றது. வீட்டின் பின்கதவை உடைத்து உள்நுளைந்து அவை திருடப்பட்டிருந்தன. வீடு திரும்பிய வீட்டு உரிமயாளர் பொலிஸில் முறையிட்டார்.
விசாரணைகளின்போது கோண்டாவில் மற்றும் சுன்னாகம் பகுதிகளைச் சோந்த இரண்டு பேரைக் (20, 17 வயதுடையவர்கள்) கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.அவா்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டன.