ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன்முறைய 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்!

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய தெரியவந்துள்ளது.

அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கான எதிரான கேள்வியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்தது.

ஸ்ரீலங்காவை பொறுத்த வரை டொலருக்கு எதிரான ரூபா 200 ரூபாவுக்கு அதிகமான தொகைக்கு வீழ்ச்சியடைந்தது இதுவே முதல் தடவையாகும்.

ஏற்கனவே டொலருக்கான கேள்வி அதிகரித்து செல்வதை தடுப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை ஸ்ரீலங்காவிற்கு எடுத்து வருவதற்கு இருந்த தடையை நீக்கியது.

இதனையடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து வெளிநாட்டுகளில் முதலீடுகள் செய்யப்படுவதையும் இறக்கு மதிகளையும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றும் டொலருக்கான கேள்வி அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.