யாழ்.மீசாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது யுவதியில் சடலம்

தென்மராட்சி – மீசாலை கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (09) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.