ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு வயர்களை வெட்டி திருடி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வயர்களை மீசாலை வாகையடி சந்திக்கு அருகில் வெட்டி திருடி சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவதினால் மீசாலை வாகையடி பகுதியில் வசிக்கும் சுமார் 20 வீடுகளுக்கு ஸ்ரீலங்கை ரெலிகோம் நிறுவனத்தினரால் இணைக்கப்பட்ட வயர்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இங்கு 1.2 இலட்சம் பெறுமதியான தொலைத்தொடர்பு இணைப்பு வயர்கள் இவ்வாறு வெட்டி திருடப்பட்டுள்ளதாக ரெலிகோம் நிறுவனத்தினரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.