44 வயது பெண்ணொருவர் தாக்கியதில் ஆண் ஒருவர் மரணம்… திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.