மகிழ்ச்சியுடன் இலங்கை பெண் லொஸ்லியா வெளியிட்ட காணொளி… இந்த நேரத்தில் இது தேவையா? திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

கொரோனாவினால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார்.

உலகமே கொரோனாவினால் நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையினரும் அடங்குவர்.

இந்நிலையில் லொஸ்லியா தனக்கு பிடித்தமாக பாடலைப் படி காணொளி வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மற்றொரு பாடலைப் பாடுகிறேன் சற்று சொதப்பியுள்ள காட்சியினை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட காணொளியினை சிலர் பாராட்டி வரும் நிலையில், சிலர் பயங்கரமாக கோபத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று சகட்டுமேனியாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.