19 மாவட்டங்களில் வியாழனன்றே ஊரடங்கு தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் 19 மாவட்டங்களிலும் ஊரடங்கு இதேபோன்று தளர்த்தப்படும் என்றி முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.