வெளிநாட்டில் தனியாக சிக்கி தவிக்கும் நடிகர் விஜய் மகன்.. மீட்க முடியாத துயரத்தில் குடும்பத்தினர்கள்..!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் நேரத்தில், மேலும் 15 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். இதனால், கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக நடிகர் விஜய்க்கு தகவல் கிடைத்தது.

இதனால் பெரும் அதிர்ச்சிடையந்த, விஜய் மகனின் நிலைமையை நினைத்து சோகமாக இருப்பதாகவும் கனடாவில் மகன் தனியாக இருப்பதை அறிந்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவில் இருப்பது போன்று கனடாவில் கொரோனா தொற்று அதிகம் இல்லை என்றாலும் சஞ்சய்

உடன் படித்தவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் சஞ்சய் மட்டும் தனியாக இருப்பதால் விஜய் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சஞ்சய் கனடாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற தகவல் மட்டும் விஜய் குடும்பத்தினர்களை நிம்மதி அடைய செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.