முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு

முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே கொடுப்பனவைப் பெற தகுதியுள்ள நபர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..