யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் உறுதி – பலாலியில் தங்கவைக்கப்பட்டவர்கள்

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர்,

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர் ,

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 23 பேரினதும் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 17 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.