திருமணமான 2 மாதத்தில் வெளிநாடு சென்ற கணவன்!… தூக்கில் தொங்கிய புதுப்பெண்

திருமணமாகி 2 மாதங்களில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் தன்னிடம் பேசாததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

வேளாங்கண்ணி அருகே மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால், இவரது மகள் சுகந்தி(வயது 24).

இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த ராஜா(வயது 33) என்பவருக்கும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்தது.

திருமணமான இரண்டு மாதத்திலேயே ராஜா வெளிநாட்டுக்கு சென்று விட்டார், இந்நிலையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ராஜாவின் குடும்பத்தினர் தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜாவும், சுகந்தியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் சுகந்தி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற பொலிசார் சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.