இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்! சாபம் விடும் சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன்! காணொளி இணைப்பு

சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன் சாபம் இட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த நபர் “உனக்கும், உனது அம்மா அப்பாவுக்கும் இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்” என சபித்துள்ளார்.

சுவிசில் செயற்படுகின்ற கிறிஸ்தவ சபையான ஒய்கோஸ் சபையின் ஒரு பிரதான பாஸ்டரான பாசல் மாநகரில் வசிக்கும் பாஸ்டர் பிலிப் மனோகரசிவாஜி அவர்களின் புதல்வன் ரூபாஸ் என்பவரே இந்த சாபத்தை விட்டதாகவும் தெரியவருகின்றது.

கொரோனா வைரஸால் உலகமே கலங்கி நிற்கின்ற இவ்வேளையில், அனர்த்தத்தில் இருந்து மீழுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த தெய்வத்தின் நாமம், இன்று சாபம் இடுவதற்கு பயன்படுவதும், அதுவும் ஒரு பாஸ்டரின் மகனே அந்த நாமத்தை அவதூறு செய்வது மிகுந்த கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.