யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 4 லட்சத்து 68 ஆயிரத்து 476 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை, மூன்று நகர சபைகள், 13 பிரதேச சபைகள் உட்பட 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு, யாழ்ப்பாணம் மாநகரசபைகளுக்கான வாக்களிப்பில் 56 ஆயிரத்து 182 வாக்காளர்களும் வல்வெட்டிதுறை நகரசபைக்கான வாக்களிப்பில் 6ஆயிரத்து55 வாக்காளர்களும் பருத்தித்துறை நகரசபைக்கான வாக்களிப்பில் 7 ஆயிரத்து 864 வாக்காளர்களும் சாவக்கச்சேரி நகரசபைக்கான வாக்களிப்பில் 12 ஆயிரத்து 490 வாக்கா ளர்களும் காரைநகர் பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 8 ஆயிரத்து 170 வாக்காளர்களும் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 7 ஆயிரத்து 219 வாக்காளர்களும் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 3 ஆயிரத்து 174வாக்காளர்களும் வேலனை பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 12 ஆயிரத்து 763வாக்காளர்களும் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 34 ஆயிரத்து 292 வாக்காளர்களும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 6ஆயிரத்து278 வாக்காளர்களும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 37 ஆயிரத்து 053 வாக்காளர்களும் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான தேர்தலில் 37ஆயிரத்து86வாக்காளர்களும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 52 ஆயிரத்து 517 வாக்காளர்க ளும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 35 ஆயிரத்து 47 வாக்காளரும் பருத்தித்துறை பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 29 ஆயிரத்து 394 வாக்காளரும் சாவ கச்சேரி பிரதேச சபைக்கான வாக்களிப்பில் 41 ஆயிரத்து 732 வாக்காளர்களும் நல்லூர் பிரதேச சபைக்கான தேர்தலில் 27 ஆயிரத்து 100 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.