என் கணவரின் கடைசி ஆசை! முறைப்படி அடக்கம் செய்யுங்கள்…. கதறி அழும் டாக்டரின் மனைவி? தீயாய் பரவும் காட்சி

கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த டாக்டரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியுள்ளது.

சென்னையை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய சமூக விரோதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த மருத்துவரின் உடல் சென்னை அருகே வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மருத்துவரின் மனைவி ஆனந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமது கணவர் மரணிக்கும் முன்பாக தாம் இறந்தால் கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.