க.பொ.த உயர்தர பரீட்சை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

க.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையென தெரிவித்துள்ளார்.