திருமணம் செய்து வைக்காத பெற்றோர்கள்.. விரக்தியில் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

செங்கம் அருகே, திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தலையில் அம்மிக்கல்லை போட்டு, பெற்றோரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, குப்பந்தாங்கலைச் சேர்ந்த கோவிந்தசாமி, மாங்கனி தம்பதியின் மகன் ராஜ்குமர், இவர் கடந்த சில மாதங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி பெற்றோரை வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இதனால், திருமணம் ஆகாத விரக்தியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மனமுடைந்து காணப்பட்ட ராஜ்குமார் ஆத்திரத்தில் தனது பெற்றோரின் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்றுள்ளார். இதனையடுத்து தேனி மலைப்பகுதியில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.