கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 414ஆக அதிகரிப்பு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று (ஏப்ரல் 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 414ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

கொழும்பு -12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 11 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

109 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

298 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.