ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமாகிய ரவி கரணாநாயக்க, கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை விசேட ஊடக சந்திப்பை செய்தார்.

இதில் பேசிய அவர் மேற்கண்ட கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்..

அத்துடன் நாடு வழமைக்குத் திரும்பும்வரை ஊரடங்குச் சட்டம் அவசியம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.