இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து காத்திருக்கு..! ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்

தற்போது உள்ள சூழலில் உலகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையில் ஓன்று கொரோனா.

வேகமாக பரவிவரும் இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவிலும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த் என்ற சிறுவன் கொரோனாவை முன்பே கணித்து கூறியிருந்த நிலையில், தற்போது சிறுவன் கூறியபடியே நடப்பதால் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பரில் உலகுக்கே ஒரு பேரழிவுவரும் என்றும் அந்த பேரழிவு மார்ச் 31ம் தேதிவரை நீடிக்கும் எனவும், கூடவே அது கொரனாவை விட கொடியதாக இருக்கும் எனவும் கூறியுள்ளான்.

இந்த நிலையில் , மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மட்டுமே நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும், கூடவே விலங்குக்ளை கொல்வதையும் நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சிறுவன் கொரோனா விஷயத்தில் கூறியது அப்படியே நடந்துவருவதால் தற்போது சிறுவன் கூறியதை கேட்டு மக்கள் மத்தியில் சற்று பீதி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சிறுவன் கூறிய அனைத்தும் இதுவரை பலித்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.