யாழ் காரைநகர் பகுதியில் கடலுக்குள் பாய்ந்த அரச பேருந்து

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.