மிகவிரைவில் 5000 ரூபா வழங்கும் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு வேளையில் 5000 ரூபா வழங்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் அதன் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று சனிக்கிழமை பகல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் சட்டத்தரணி தொலவத்த இதனைத் தெரிவித்தார்.






