யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் ஒருவருக்கே கொரோனா தொற்றென தெரிவிக்கப்பட்டுள்ள போதும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே இன்று 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 8 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு – 3 பேர்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் – 45 பேர்.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் – 9 பேர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.

ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை – ஒருவர்.