வீட்டில் செல்லமாக வளர்ந்த தங்கை… குடிபோதையில் தங்கை என்றும் பாராமல் அண்ணன் செய்த கொடூரம்

குடிபோதையில் உடன்பிறந்த தங்கை என்றும் பாராமல் அண்ணன் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவருடைய மனைவி சந்திரமதி. இந்த தம்பதிக்கு சண்முகவடிவு, விஜயா, அம்சவள்ளி என மூன்று மகள்களும், கணேஷ் பாபு என்ற மகனும் உள்ளனர்.

இதில் கடைசி மகள் மகள் அம்சவள்ளி ராஜபாளையத்தில் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததோடு, தனது சொந்த ஊரைச் சேர்ந்த முருகேச பாண்டி என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், அம்சவள்ளியின் அண்ணன் கணேஷ் பாபு மட்டும் சம்மதம் தெரிவிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லொறி ஓட்டுனரான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதுபானக்கடை திறந்ததால், மதுவருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர், தங்கையிடம் சண்டையிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கணேஷ் பாபு அருகிலிருந்த கட்டையால் தங்கை அம்சவள்ளியைக் கொடூரமாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மகளின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இதனிடையே கொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சுழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பியோடிய கணேஷ் பாபுவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.