இலங்கையின் கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் தமிழ் உறுப்பினர்களாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனும், கிளிநொச்சி கல்வி வலய ஆங்கில பாட உதவிக் கல்வி ப்பணிப்பாளரான பி.என்.சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் ஆரம்ப மற்றும் இரண்டாம், மூன்றாம் கல்வி துறைகளை காலத்தின் தேவைக்கேற்ப உகந்தவாறு நவீனமயமாக்குவது அவசியமென இனங்காணப்பட்டுள்ளதாலும், நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக கல்வித்துறைக்கு எந்த விதத்திலும் தடையேற்படாதவாறும், தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்லும் திறன் முறைகளை காலத்திற்கு காலம் வகுத்து கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






