நாடுமுழுவதும் ஞாயிறன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது

நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் 18ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும்.

அத்தோடு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறை மறு அறிவித்தல்வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.