கோவிட் – 19 நிதியத்துக்கு 3 மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது மூன்று மாதங்களுக்குரிய சம்பளத்தை கோவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அவரது தனது மூன்று மாத சம்பளமான 2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயை இந்த நிதியத்துக்கு வழங்கியுள்ளார்.

அதற்கான காசோலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.