இலங்கைக்கு ஆடம்பர பொருள்கள் மற்றும் கார்களை இறக்குமதி செய்வதற்கு அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைக்கு முன்வைத்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (14) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.
அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அந்நியச் செலவணியை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






